dimanche 16 août 2009

பாசப் பறவைகள்























பாசப் பறவைகள் இரண்டு
பறந்து வந்ததம்மா!
பணிந்து நானும் ஏற்றுக்கொண்டு
பாசமோடு நின்றேனம்மா!

போதும் போதும் என்று சொல்லி
புனித வாழ்வு வாழ்ந்ததம்மா!
புன்னகை பூத்த வதனங்கள் இரண்டும்
பூப்பூவாய் பொலிந்ததம்மா!

நல் மனதின் கொள்கை கண்டு
நானும் வியந்து நின்றேனம்மா!
நலிந்திடாது ஒன்றை ஒன்று
ஆதரித்து நின்றதம்மா!

கூடும் வாழ்க்கை தன்னிலே
குணங்கெடாது வாழ்ந்திருந்து
கொள்கை கொண்டு கோலாகலமாய்
கூடிய மட்டும் வாழ்ந்தனவே!
-சுஜா

Aucun commentaire:

Enregistrer un commentaire