ஆக்கமும், ஊக்கமும்
அகமகிழ் வெய்தும்.
நினைவும், நோக்கமும்
மனதினின்றகலாது.
பாட்டும், பொருளும்
பண்பை ஊட்டும்.
பரிவும், பாசமும்
பலன்களை அளிக்கும்.
தாக்கமும், துயரமும்
தனித்திருக்காது.
சோதனையும், வேதனையும்
சொற்கேளாது.
நோயும், நொடியும்
நொறுங்க வைக்கும்.
நோன்பும், நோற்பும்
நோதலின்றிருக்கும்.
சிந்தனையும், செயலும்
சிறகட்டித்துப் பறக்கும்.
அறிவும், ஆற்றலும்
அதியச மனிதனை உருவாக்கும்.
பேச்சும், பேறும்
பெரும் படைப்புக்களாக்கும்.
மூச்சும் முயற்சியும்
முகம் கொடுத்து வாழவைக்கும்.
-சுஜா
Aucun commentaire:
Enregistrer un commentaire